Tuesday, December 28, 2010

விநாயகர்...........

விநாயகர் கோயில் இந்தியாவில் மக்கள் வசிக்கும் வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் விநாயகரின் சக்தி தான் என்று பல பூசாரிகள் தெரிவித்தனர். இந்த கதையை கேட்டவுடன் நானும் விநாயகரின் பரம பக்த்தன் ஆகி விட்டேன். இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த கதை இதோ

விநாயகரின் சக்தி:
விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கட்டை தான். அவர் டயட்டில் இருந்தாலும் கூட கொழுக்கட்டை தான் சாபிடுவாரம். அதனால் தான் இந்த கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்திக்கு கூட அதிக அளவில் செய்து விநாயகருக்கு கொடுக்கிறார்கள். இந்த கொழுக்கட்டை நாளடைவில் இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை என்று பல விதமாக பரிமாணம் எடுத்தது.

விநாயகரும் அறிவியலும்:
சரி கதைக்கு வருவோம். ஒரு விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் அதிகமாக கொழுக்கட்டையை சாப்பிட்டு விட்டார். அது இரவு நேரம் வேறு. அதிகம் சாப்பிட்டதால் நடக்க முடியாமல் திணறிய விநாயகர் கீழே விழுந்து விட்டார். இதை பார்த்த சந்திரன் சிரித்துவிட்டார் அதனால் கோவமடைந்த விநாயகர் சந்திரனை பார்த்து "நீ அழகாய் உள்ள ஆணவத்தில் தானே என்னை பார்த்து சிரிக்கிறாய் அதனால் நான் உன்னை சபிக்கிறேன் மாதத்தில் தேய்ந்து தேய்ந்து ஒருநாள் தெரியாமல் போய்விடுவாய் மீண்டும் வளர்ந்து வளர்ந்து ஒருநாள் மட்டுமே தெரிவாய்" என்றார் விநாயகர். இதனால் தான் மாதம் ஒரு முறை பௌர்ணமியும் அம்மவாசையும் வருகிறது. விநாயகர் சபிப்பதற்கு முன்னாள் வரை தினமும் பௌர்ணமியாகவே இருந்ததாம். பார்த்தீர்களா? இது தான் விநாயகரின் சக்தி.

எங்கள் கல்லூரியில் உள்ள விநாயகர் கோவிலில் பக்த்தர்கள்(மகளிர்) கூட்டம் "என்னடா இன்று விநாயகர் சதுர்த்தியா?" என்று சந்தேக்கப்படும் அளவுக்கு அலைமோதும். இந்த பக்தர்கள் தினமும் வருவதையும் போவதையும் தினமும் காண்பவர் கல்லூரி watchmam. "என்னுங்க நம்ம கல்லூரியில் பகத்தர்கள் அதிக மாயிட்டே போற மாதிரி தெரியுது? இன்னைக்கு சுண்டலும் இல்லை பொங்கலும் இல்லை அப்பறம் எதற்கு இத்தனை கூட்டம்?" என்று நான் கேட்க, அவர் "அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்று தேர்வு நடக்கிறதாம் அதான் இத்தனை கூட்டம்" என்றார்.

இந்த பக்தர்களில் ஒருவரை கேட்டதற்கு அவர் "நான் விநாயகர கும்பிட்டிட்டு போனேன்னா நான் paas பன்னிடுவேன்" இதனால் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிப்பது எனவென்றால் படித்தால் தான் மதிப்பெண் வருமே அன்றி கும்பிட்டால் வராது. ஆஞ்சநேயர் விவேக்குக்கு படத்தில் உதவுவதை போல நமக்கு விநாயகர் உதவுவார் என்று கனவு காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது உங்கள் நாளயவிடியல்.

1 comment: