Thursday, July 15, 2010
எட்டாக் கல்வி .........
Sunday, July 11, 2010
மக்கள் தொகை
எந்த ஒரு உயிரினத்தையும் பண்ணை வைத்து வளர்தலும் கூட நூறு ஆண்டுகளில் ஐநூறு சதவிதமாக உயராது அனால் அப்படி உயர்ந்த ஒரே உயிரினம் இந்திய மனிதர்கள் தான்.கடந்த நூறு ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக மக்கள் தொகையை பெருக்கியவர்கள் உத்திரப்ரதேச மக்கள் தான்.இன்று உத்திரப்ரதேச மக்கள் தொகை பிரேசில் நாட்டு மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.உத்திரப்ரதேச மக்கள் தொகையை விட வெறும் ஐந்து நாடுகளின் மக்கள் தொகைதான் அதிகம். உத்திரப்ரதேச மக்களுக்கு தமிழக மக்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்ட தமிழகத்திலும் மக்கள்தொகை தொடர்ந்து பெருகி வருகிறது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் நல்ல சான்று. "ஊருக்கு ஒரு தலைவர் இருக்கலாம் ஆனால் தலைவருக்கு ஒரு ஊரே இருக்க கூடாது" என்று படிப்பறிவு இல்லாத தமிழ் தலைவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.
நம் நாட்டில் அரசு உதவி இல்லாமல் தானே வளர்வது மக்கள் தொகை மட்டும் தான்.விண்ணில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவதுகூட சுலபம் அனால் மக்கள் தொகையை கணக்கெடுப்பது ரொம்ப கஷ்டம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பவர்கள் கதறுகிறார்கள்.பல கோடி செலவழித்து மக்கள்தொகையை கணக்கெடுக்கும் ஒரே நாடு நம் நாடாகத்தான் இருக்க முடியும்.இந்திய புலிகளின் எணிக்கை 1500ரை விட குறைவாகவே உள்ளது அவை இந்திய புலிகளே இல்லை காரணம் அவை இந்திய புலிகளாக இருந்தால் குருகியகாலத்திற்க்குள் பல்லாயிரக்கணக்காக பெருகியிருக்கும்.
உட்பத்திதிரன் அதிகமாக வேண்டும்,மனிதவளம் வேண்டும் என்று தொழில் வளர பலர் சொன்னதை மக்கள் தவறாக புரிந்துகொண்டார்களோ என்னவோ மனித உற்பத்தியில் நம்மை முந்த உலகில் எவனும் இல்லை.குப்பை தொட்டியில் கூட குழந்தை கிடக்கும் பெருமைக்கு உரிய ஒரே நாடு நம் நாடுதான்.இதில் ஒரு நல்ல நேரம் சீன மக்கள் தொகை நம்மைவிட அதிகம் என்று பலருக்கு தெரியாது தெரிந்தால் நாட்டுப்பற்று மிக்க பலர் அவர்களை முந்த தங்களால் முடிந்த அளவு முயற்சிப்பார்கள்.
இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை மேலும் இருமடங்காக பெருகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.இப்பொழுதே பேருந்துகள் குப்பை லாரி கேரளாவுக்கு அடிமாடுகளை ஏற்றிசெல்வதுபோல காட்சியளிக்கிறது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்குமோ.............இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் தமிழக அரசு விரைவில் ஒருவருக்கு ஒரு அரிசி கொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினாலும் வியப்பதற்கு இல்லை.