Tuesday, November 30, 2010

தமிழ் வளர்ச்சியில் தமிழ் பாடல்களின் பங்கு இன்றியமையாதது

தமிழ் வளர்ச்சியில் தமிழ் பாடல்களின் பங்கு இன்றியமையாதது. இன்றைய புலவர்கள் தமிழில் மட்டும் இன்றி பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் இப்படி சிறந்த ஒரு கவிஞர் எழுதிய பாட்டு தான் இது

"ஒரு கூடை சன்லைட்; ஒரு கூடை மூன்லைட்; ஒன்றாக சேர்ந்தால் உருவாகும் என்லைட்(enlight)"
enlight என்றால் ஞானம் வருவதாம். நான் ஒரு பொறியாளர் என்பதால் இந்த சிறந்த கொள்கையை படத்துடன் விளக்குவதில் பெருமை அடைகிறேன்.

+ =
இதன் அர்த்தம் தெரிந்த உடனேயே நான் இரண்டு கூடை வாங்கி வந்து சன்லைட்டையும் மூன்லைட்டையும் சேர்த்து வருகிறேன் எனக்கு விரைவில் ஞானம் வந்து விடும் என்று நம்புகிறேன் நீங்களும் விரைவில் ஞானமடைய எனது வாழ்த்துக்கள்.இப்படி பல புதிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்தப்பாடலை நக்கீரர் தலைமையிலான மூன்றாம் தமிழ் சங்கத்தில் அரங்கேற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இன்னும் பல பாடல்களை பார்க்கலாம் அதற்க்கு முன்பு இதோ உங்களுக்காக ஒரு தேச பக்தி பாடல் "ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும் எனக்கு கவலையில்லே......." இது போன்ற பாடலகளை கேட்டு நீங்கள் எதற்கும் கவலைபடாமல் இருங்கள்.

படத்தில் வரும் கவிதைகளில் இதோ ஒரு சாம்பிள்

"என் பேரு சூச; நான் திங்குறது தோச; இப்போ நான் உனக்கு வைக்கப்போறேன் பூச"

இப்படி பட்ட கவிதைக்கு வரதராசனார் போன்ற ஒருவர் வந்து உரை எழுதவேண்டும் என்பதே எனது விருப்பம்.பாரதியாருக்கு பிறக்கு இப்படி ஒரு புது கவிதையை யாராலும் கேட்டிருக்க முடியாது என்பது உறுதி.இப்படி தமிழுக்கு சிறப்பான தொண்டு ஆற்றுவதையே தங்கள் கடமையாக பலர் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர அரசியல் வாதிகள், பெயர் வைப்பது தான் சிறப்பிலும் சிறப்பு. கலைஞர் நகர், கலைஞர் இலவச தொலைக்காட்சி திட்டம், கலைஞர் TV, ஜெயா TV என்று தங்கள் பெயர்களால் ஆன பலவற்றை சொல்லலாம். இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் தான் கட்டிய அணைக்கு கல்லணை என்று தான் பெயரிட்டான். இவர்களின் சிந்தனைக்கு அளவே இல்லை. வரும் காலங்களில் பல ஆறுகள், குளம், குட்டை, சாலை, என அனைத்தும் இவர் பெயரில் இருக்கும் போல தெரிகிறது. இந்தியப் பெருங்கடலின் பெயரை கூட மாற்றி தங்கள் குடும்பத்தின் பெயரை வைத்து அதற்க்கு பெயர்சூட்டு விழ நடத்தினாலும் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

வாழ்க தமிழ்............






Sunday, November 21, 2010

தமிழில் பெயர்கள்-பகுதி 1

இன்று தமிழர்கள் வைக்கும் பெயர்களின் அர்த்தமும் காரணமும் தமிழர்களுக்கே தெரிவதில்லை. ஏதோ நாலு எழுத்தை சேர்த்து ஒரு பெயராக வைத்து தமிழுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள். இப்படி வைக்கும் பெயர்களில் வடஎழுத்துக்கள் வருவதையே பெருமை என்று கருதுகிறது பல தமிழ் அறிவு ஊற்றுகள். நானும் ஒரு தமிழன் அதிலும் ஒரு படித்த தமிழன் ஆகையால் நானும் இந்த "தமிழ் பெயர் அறிவு ஊற்றுகள்" கூட்டத்தில் சேர்ந்து தமிழை மேலும் சிறப்பிக்க முடிவெடுத்துள்ளேன்.

தமிழர்கள் தங்கள் பெயர்களை ஆர்யா, விஜய் என்று வட மொழியில்வைக்கிறார்கள் இவர்களால் வரும் காலத்தில் பல ஆண்மகன்கள் சுர்ஜித் சிங் பர்னாலா(தமிழக ஆளுனரை சிறப்பிக்க), நெல்சன் மண்டேலா என்றபெயர்களிலும் பெண்கள் பலர் ஹில்லாரி கிளிண்டன், மனுசா கொய்ராலா என்ற பெயருடனும் தமிழகத்தில் உலா வருவார்கள் போல் தெரிகிறது. இப்படி தங்கள் பிள்ளைகளுக்கு பெயர்வைக்கும் தமிழர்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கூட வேறு மொழி பெயர்கள் தான் வைப்பார்கள் ஜிம்மி, ஜாக்கி, ராக்கி, சீசர், அல் க்ஸ் போன்ற பெயர்கள். இதில் ஒரு சிறப்பு எங்கள் கல்லூரி விடுதி நாயின் பெயர் மார்லி. இது போன்ற பெயர்களை யார் எங்கு கண்டுபிடிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. இது போன்ற புது கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு தமிழ் செம்மொழி விருது தந்து சிறப்பிக்க வேண்டும்.

இதில் இருந்து மாறுபடும் பலர் தங்கள் பெயர்களை bus boarad இல் இருந்துதான் தெரிவு செய்வார்கள் அதாவது ஒரு ஊரின் பெயரை தங்கள் பெயராகவைத்துக்கொள்வார்கள். இப்படி வந்தவை தான் கோபி, பழனி ,திருப்பதிபோன்ற பல பெயர்கள் என்று எனது ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். வரும்காலங்களில் படித்த பல தமிழர்கள் தங்கள் பெயர்களை மாக்கினாம்பட்டி , ஊஞ்சவேலம்பட்டி, பாளையங்கோட்டை என்று மாற்றிக்கொண்டால் அதில்ஆச்சர்யப்படுவதர்க்கு ஒன்றும் இல்லை. நானும் ஒரு தமிழன் அதிலும்படித்த தமிழன் ஆகையால் பிள்ளைகளுக்கு நானும் ஊர் பெயரை வைக்கசொல்வேன் அதிலும் மற்ற நாட்டு ஊரின் பெயர்கள் தான் வைப்பேன் ஆண்பிள்ளைகளுக்கு ஹிரோஷிமா என்றும் பெண் பிள்ளைகளுக்குநாகசாகி(நாகலச்சுமியன் modern name) என்று வைப்பேன். இதை பார்க்கும்பல தமிழ் ஆர்வரளர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு பெய்ஜிங், ஆம்ஸ்டர்டம், காத்மாண்டு என்று பல பெயர்களை வைத்து தமிழைவளர்ப்பார்கள்.

தமிழை வளர்ப்பதில் தமிழ் திரைப்படங்களின் பங்கு பற்றி நான்சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? இப்படி பெயர் வைப்பதைபார்த்த தமிழ் பட தயாரிப்பாளர்கள் முதல் முறையாக விருமாண்டி படத்தில்வந்தத காளைக்கு சொரிமுத்து என்று பெயரிட்டு "தமிழ் பெயர் அறிவுஊற்றுகள்" கூட்டத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தினார்கள்.இதுபோன்ற பல தொண்டுகளை தமிழுக்காக செய்யும் தமிழ் சினிமாவை பற்றிஅடுத்த பகுதியில் தெளிவாக பார்ப்போம்.......