இன்றைய கல்லூரிகளில் காணப்படும் காதலை பற்றி சொல்லவாவேணும் படிப்பதற்கு கல்லூரிவரும் மாணவர்கள் காதலிக்க ஆரம்பிற்பது வினோதமானது. இப்படி காதலிக்க வைப்பதில் நண்பர்களின் பங்கு மகத்தானது.ஒரு மாணவன் எதார்த்தமாக ஒரு மாணவியிடம் பேனா, பென்சில் வாங்கிவிட்டால் போதும் அவர் நண்பர்களுக்குத் தான் கொண்டாட்டம் காரணம் அவர்கள் அந்த மாணவியை பற்றி அவனிடம் திரும்ப திரும்ப பேசி எப்படியாவது காதலை வரவைத்து விடுவார்கள்.
செல் கம்பனி ஓடுவதற்கு காரணமே இவர்கள் தான் என்று நான் நினைக்கிறேன்.இப்படி காதலிப்பவர்கள் செல்போனில் பேசுவதை தான் பொறுத்துக்கொள்ள முடியாது இவர்கள் இரவு முழுவதும் செல் போனில் பேசுவார்கள் பகலில் நேரில் பேசுவார்கள் இப்படி 24 மணி நேரம் பேசும் இவர்கள் பாட வேளைகளில் தூங்குவார்கள். இப்படி இவர்கள் என்னதான் பேசுவார்கள் என்ற சந்தேகம் என்னை என் நண்பனிடம் இந்த கேள்வியை கேற்க செய்தது.
நான்:மாப்ளே இவ்வளவு நேரமா பேசுனையே உங்க ஊர்காரங்க அத்தன பேர் கிட்டயும் பேசுனைய?
நண்பன்: இல்லடா என்னோட காதலிகிட்ட பேசுனன்
நான்: ஓ.. அப்படி என்னடா இவ்வளவு நேரமா பேசுன?
நண்பன்:அவங்க அம்மா இன்னைக்கு தேங்காய் போடாம தேன்காசட்டினி செஞ்சாங்களாம் அதான் எப்படி செஞ்சாங்கன்னு கேட்டேன்.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள் ஆனால் தூணுக்கு தூண் இவர்கள் இருப்பார்கள்.கலூரிகளில் எந்த விழ வந்தாலும் முதலில் இவர்களுக்குத்தான் கொண்டாட்டம்(ஆசிரியர் தினமாக இருந்தாலும் கூட) காரணம் பல பாட வேலைகள் விழாவிற்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தை சிறிதும் வீணாக்காமல் இவர்கள் பேசுவார்கள்.
காதல் என்ற தலைப்பிலேயே ஒரு படம் வெளிவந்தது.இந்த படத்தில் காதலர்கள் சேர்ந்தால் என்ன கஷ்டம் வரும் பிரிந்தால் என்ன கஷ்டம் வரும் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கும் இந்த படத்தை பார்த்துவிட்டு காதலர் பேசும் வீர வசனம் குறிப்பிடத்தக்கது. எத்தன காதல் தண்டபாணி வந்தாலும் நம்ம காதல பிரிக்க முடியாது என்பார்கள். இந்தப் படத்தை இவர்கள் தவறாக புரிந்து கொண்டதே இதற்க்கு காரணம். இதற்க்கு இந்தகதையை சான்றாக சொல்லலாம்.
"ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் விடிய விடிய அரிச்சந்திர புராணத்தை நடத்தினாராம் பிறகு அங்கு அமர்ந்திருந்த ஒரு மாணவனை பார்த்து இந்த கதையில் இருந்து நீ என்ன தெரிந்து கொண்டாய் என்று கேட்டார் அதற்க்கு அந்த மாணவன் ஐயா ஒரு பொய் சொன்னால் நமக்கு இத்தனை துன்பம் வராது அதனால் நாம் அனைவரும் பொய்சொல்ல வேண்டும் என்றான்" துன்பம் வந்தாலும் பொய்சொல்ல கூடாது என்ற கருத்தை அந்த மாணவன் எப்படி புரிந்து கொண்டான் என்று பாருங்கள்.
ஒரு சில காதல் வெற்றியில் முடிந்தாலும் பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. காதலித்து சேர்ந்தால் உறவினர்களோடு குழப்பம் அப்படியே காதலை மறந்து வாழ்ந்தாலும் குழப்பம். ஆகையால் காதலித்து நேரத்தையும்,பணத்தையும் வீணாக்குவதை விட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
இன்னும் இவரது கருத்தையும் பாருங்கள்
click here வில்லவன்
செல் கம்பனி ஓடுவதற்கு காரணமே இவர்கள் தான் என்று நான் நினைக்கிறேன்.இப்படி காதலிப்பவர்கள் செல்போனில் பேசுவதை தான் பொறுத்துக்கொள்ள முடியாது இவர்கள் இரவு முழுவதும் செல் போனில் பேசுவார்கள் பகலில் நேரில் பேசுவார்கள் இப்படி 24 மணி நேரம் பேசும் இவர்கள் பாட வேளைகளில் தூங்குவார்கள். இப்படி இவர்கள் என்னதான் பேசுவார்கள் என்ற சந்தேகம் என்னை என் நண்பனிடம் இந்த கேள்வியை கேற்க செய்தது.
நான்:மாப்ளே இவ்வளவு நேரமா பேசுனையே உங்க ஊர்காரங்க அத்தன பேர் கிட்டயும் பேசுனைய?
நண்பன்: இல்லடா என்னோட காதலிகிட்ட பேசுனன்
நான்: ஓ.. அப்படி என்னடா இவ்வளவு நேரமா பேசுன?
நண்பன்:அவங்க அம்மா இன்னைக்கு தேங்காய் போடாம தேன்காசட்டினி செஞ்சாங்களாம் அதான் எப்படி செஞ்சாங்கன்னு கேட்டேன்.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள் ஆனால் தூணுக்கு தூண் இவர்கள் இருப்பார்கள்.கலூரிகளில் எந்த விழ வந்தாலும் முதலில் இவர்களுக்குத்தான் கொண்டாட்டம்(ஆசிரியர் தினமாக இருந்தாலும் கூட) காரணம் பல பாட வேலைகள் விழாவிற்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தை சிறிதும் வீணாக்காமல் இவர்கள் பேசுவார்கள்.
காதல் என்ற தலைப்பிலேயே ஒரு படம் வெளிவந்தது.இந்த படத்தில் காதலர்கள் சேர்ந்தால் என்ன கஷ்டம் வரும் பிரிந்தால் என்ன கஷ்டம் வரும் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கும் இந்த படத்தை பார்த்துவிட்டு காதலர் பேசும் வீர வசனம் குறிப்பிடத்தக்கது. எத்தன காதல் தண்டபாணி வந்தாலும் நம்ம காதல பிரிக்க முடியாது என்பார்கள். இந்தப் படத்தை இவர்கள் தவறாக புரிந்து கொண்டதே இதற்க்கு காரணம். இதற்க்கு இந்தகதையை சான்றாக சொல்லலாம்.
"ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் விடிய விடிய அரிச்சந்திர புராணத்தை நடத்தினாராம் பிறகு அங்கு அமர்ந்திருந்த ஒரு மாணவனை பார்த்து இந்த கதையில் இருந்து நீ என்ன தெரிந்து கொண்டாய் என்று கேட்டார் அதற்க்கு அந்த மாணவன் ஐயா ஒரு பொய் சொன்னால் நமக்கு இத்தனை துன்பம் வராது அதனால் நாம் அனைவரும் பொய்சொல்ல வேண்டும் என்றான்" துன்பம் வந்தாலும் பொய்சொல்ல கூடாது என்ற கருத்தை அந்த மாணவன் எப்படி புரிந்து கொண்டான் என்று பாருங்கள்.
ஒரு சில காதல் வெற்றியில் முடிந்தாலும் பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. காதலித்து சேர்ந்தால் உறவினர்களோடு குழப்பம் அப்படியே காதலை மறந்து வாழ்ந்தாலும் குழப்பம். ஆகையால் காதலித்து நேரத்தையும்,பணத்தையும் வீணாக்குவதை விட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
இன்னும் இவரது கருத்தையும் பாருங்கள்
click here வில்லவன்