Tuesday, December 28, 2010

விநாயகர்...........

விநாயகர் கோயில் இந்தியாவில் மக்கள் வசிக்கும் வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் விநாயகரின் சக்தி தான் என்று பல பூசாரிகள் தெரிவித்தனர். இந்த கதையை கேட்டவுடன் நானும் விநாயகரின் பரம பக்த்தன் ஆகி விட்டேன். இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த கதை இதோ

விநாயகரின் சக்தி:
விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கட்டை தான். அவர் டயட்டில் இருந்தாலும் கூட கொழுக்கட்டை தான் சாபிடுவாரம். அதனால் தான் இந்த கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்திக்கு கூட அதிக அளவில் செய்து விநாயகருக்கு கொடுக்கிறார்கள். இந்த கொழுக்கட்டை நாளடைவில் இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை என்று பல விதமாக பரிமாணம் எடுத்தது.

விநாயகரும் அறிவியலும்:
சரி கதைக்கு வருவோம். ஒரு விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் அதிகமாக கொழுக்கட்டையை சாப்பிட்டு விட்டார். அது இரவு நேரம் வேறு. அதிகம் சாப்பிட்டதால் நடக்க முடியாமல் திணறிய விநாயகர் கீழே விழுந்து விட்டார். இதை பார்த்த சந்திரன் சிரித்துவிட்டார் அதனால் கோவமடைந்த விநாயகர் சந்திரனை பார்த்து "நீ அழகாய் உள்ள ஆணவத்தில் தானே என்னை பார்த்து சிரிக்கிறாய் அதனால் நான் உன்னை சபிக்கிறேன் மாதத்தில் தேய்ந்து தேய்ந்து ஒருநாள் தெரியாமல் போய்விடுவாய் மீண்டும் வளர்ந்து வளர்ந்து ஒருநாள் மட்டுமே தெரிவாய்" என்றார் விநாயகர். இதனால் தான் மாதம் ஒரு முறை பௌர்ணமியும் அம்மவாசையும் வருகிறது. விநாயகர் சபிப்பதற்கு முன்னாள் வரை தினமும் பௌர்ணமியாகவே இருந்ததாம். பார்த்தீர்களா? இது தான் விநாயகரின் சக்தி.

எங்கள் கல்லூரியில் உள்ள விநாயகர் கோவிலில் பக்த்தர்கள்(மகளிர்) கூட்டம் "என்னடா இன்று விநாயகர் சதுர்த்தியா?" என்று சந்தேக்கப்படும் அளவுக்கு அலைமோதும். இந்த பக்தர்கள் தினமும் வருவதையும் போவதையும் தினமும் காண்பவர் கல்லூரி watchmam. "என்னுங்க நம்ம கல்லூரியில் பகத்தர்கள் அதிக மாயிட்டே போற மாதிரி தெரியுது? இன்னைக்கு சுண்டலும் இல்லை பொங்கலும் இல்லை அப்பறம் எதற்கு இத்தனை கூட்டம்?" என்று நான் கேட்க, அவர் "அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்று தேர்வு நடக்கிறதாம் அதான் இத்தனை கூட்டம்" என்றார்.

இந்த பக்தர்களில் ஒருவரை கேட்டதற்கு அவர் "நான் விநாயகர கும்பிட்டிட்டு போனேன்னா நான் paas பன்னிடுவேன்" இதனால் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிப்பது எனவென்றால் படித்தால் தான் மதிப்பெண் வருமே அன்றி கும்பிட்டால் வராது. ஆஞ்சநேயர் விவேக்குக்கு படத்தில் உதவுவதை போல நமக்கு விநாயகர் உதவுவார் என்று கனவு காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது உங்கள் நாளயவிடியல்.

Sunday, December 19, 2010

தமிழர்கள் தீயவர்கலாம்..

நம் தமிழ் இனத்தில் நல்லவர்களே பிறக்க மாட்டார்களா? நம் இனம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைத்தது சில வரலாற்று சம்பவங்கள் தான். ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில் ராமாயணத்தில் ராவணன் கெட்டவனாக சிறப்பாக சித்தரிக்கப்பட்டான். சரி ராவணன் கெட்டவனாக இருக்கட்டும் அவன் தம்பி விபீஷணன் "தான் என்றுமே நல்லவனாக இருக்க வேண்டும்" என்று வரம் வாங்கினான். அவனும் ராவணனை ஆதரிக்காமல் நல்லவனாகவே இருந்தான். எனினும் அவன் கெட்டவனாம் காரணம், தம்பி போரில் தன் அண்ணனை ஆதரிக்கவில்லையாம். (என்ன கொடும சார் இது?)

சரி இது போகட்டும் பலர் இந்த கதையை நம்புவது கூட கிடையாது. ஆனால் நம்புமாறு ஒரு வரலாற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது தான் சித்தூர் கொங்கன் படை திருவிழா. அந்தக்காலத்தில் பாலக்கடும் கொங்கு நாடும் இந்தியா பாகிஸ்த்தனை போல இருந்ததாம். 918AD யில் கொங்கு நாட்டிற்க்கும் பாலக்கட்டிர்க்கும் போர் ஆரம்பித்து விட்டது. கிழக்கில் ராசாதி ராசன் தலைமையிலான கொங்கு நாட்டு ராணுவமும் மேற்கில் ஒருங்கிணைந்த கொச்சின், சமோரின், பாலக்காடு மான்னர்களுக்கும் இடையே போர் துவங்கியது. ஒருங்கிணைந்த கேரளா ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கொங்கு நாட்டு ராணுவம் பின் வாங்கி போர் முடிவுக்கு வந்த்ததாம். இந்த வெற்றியைத் தான் சித்தூர் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இதற்க்கு இடையில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான கதை உள்ளது. போர் நடந்த சித்தூரில்,காளியே நேராக போர் களத்திற்கு வந்து
"சித்தூர் தாண்டுனா காட்பாடி
பாலக்காட்ட சீண்டுனவன் dead body"
என்று சொல்லி கடுமையாக போரிட்டு தமிழர்களின் தாக்குதலை முரியடித்ததாம். அந்த கடவுளுக்கு மக்கள் மீதுள்ள அக்கரையை பாருங்கள். தமிழனை அளிக்க கடவுள் கூட போர் களத்திற்கு வருவாராம்.

இப்படி பட்ட கடவுள் அனைவருக்கும் பொதுவாக இருந்தால் ஈழப்போரில் தமிழனை காக்க வந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இதுவரையில் நடக்கவில்லை இனியும் நடக்கப்போவதில்லை. தமிழனை அளிக்க துடிக்கும் இனங்கள் தான் எத்தனை எத்தனை.
இதற்க்கு காரணம் தான் என்னவோ?. இவை தமிழனின் அழிவோடு போவதில்லை. இதை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பது தான் எனது வருத்தம். கொங்கன் படை கிபி 918 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வரலாறு தமிழரில் பலருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை. இதிலும் குறிப்பாக கொங்கு நாட்டு மன்னன் ஏன் போர் தொடுத்தான்? என்ற வரலாறு எனக்கு கிடைக்கவில்லை கிடைத்தால் அதை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய நிலை தமிழன் அழிந்தால் அழுவதற்கு கூட ஆள் இல்லை. வழக்கம் போல உலகமே கொண்டாடி மகிழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு அணுகுங்கள் இதை:
http://www.webindia123.com/city/kerala/palakkad/destinations/eventsandfestivals/chitturkonganpada.htm

http://chitturfolks.webs.com/knowchittur.htm

ஒரு நாள் விடியும்.............

Tuesday, November 30, 2010

தமிழ் வளர்ச்சியில் தமிழ் பாடல்களின் பங்கு இன்றியமையாதது

தமிழ் வளர்ச்சியில் தமிழ் பாடல்களின் பங்கு இன்றியமையாதது. இன்றைய புலவர்கள் தமிழில் மட்டும் இன்றி பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் இப்படி சிறந்த ஒரு கவிஞர் எழுதிய பாட்டு தான் இது

"ஒரு கூடை சன்லைட்; ஒரு கூடை மூன்லைட்; ஒன்றாக சேர்ந்தால் உருவாகும் என்லைட்(enlight)"
enlight என்றால் ஞானம் வருவதாம். நான் ஒரு பொறியாளர் என்பதால் இந்த சிறந்த கொள்கையை படத்துடன் விளக்குவதில் பெருமை அடைகிறேன்.

+ =
இதன் அர்த்தம் தெரிந்த உடனேயே நான் இரண்டு கூடை வாங்கி வந்து சன்லைட்டையும் மூன்லைட்டையும் சேர்த்து வருகிறேன் எனக்கு விரைவில் ஞானம் வந்து விடும் என்று நம்புகிறேன் நீங்களும் விரைவில் ஞானமடைய எனது வாழ்த்துக்கள்.இப்படி பல புதிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்தப்பாடலை நக்கீரர் தலைமையிலான மூன்றாம் தமிழ் சங்கத்தில் அரங்கேற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இன்னும் பல பாடல்களை பார்க்கலாம் அதற்க்கு முன்பு இதோ உங்களுக்காக ஒரு தேச பக்தி பாடல் "ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும் எனக்கு கவலையில்லே......." இது போன்ற பாடலகளை கேட்டு நீங்கள் எதற்கும் கவலைபடாமல் இருங்கள்.

படத்தில் வரும் கவிதைகளில் இதோ ஒரு சாம்பிள்

"என் பேரு சூச; நான் திங்குறது தோச; இப்போ நான் உனக்கு வைக்கப்போறேன் பூச"

இப்படி பட்ட கவிதைக்கு வரதராசனார் போன்ற ஒருவர் வந்து உரை எழுதவேண்டும் என்பதே எனது விருப்பம்.பாரதியாருக்கு பிறக்கு இப்படி ஒரு புது கவிதையை யாராலும் கேட்டிருக்க முடியாது என்பது உறுதி.இப்படி தமிழுக்கு சிறப்பான தொண்டு ஆற்றுவதையே தங்கள் கடமையாக பலர் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர அரசியல் வாதிகள், பெயர் வைப்பது தான் சிறப்பிலும் சிறப்பு. கலைஞர் நகர், கலைஞர் இலவச தொலைக்காட்சி திட்டம், கலைஞர் TV, ஜெயா TV என்று தங்கள் பெயர்களால் ஆன பலவற்றை சொல்லலாம். இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் தான் கட்டிய அணைக்கு கல்லணை என்று தான் பெயரிட்டான். இவர்களின் சிந்தனைக்கு அளவே இல்லை. வரும் காலங்களில் பல ஆறுகள், குளம், குட்டை, சாலை, என அனைத்தும் இவர் பெயரில் இருக்கும் போல தெரிகிறது. இந்தியப் பெருங்கடலின் பெயரை கூட மாற்றி தங்கள் குடும்பத்தின் பெயரை வைத்து அதற்க்கு பெயர்சூட்டு விழ நடத்தினாலும் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

வாழ்க தமிழ்............






Sunday, November 21, 2010

தமிழில் பெயர்கள்-பகுதி 1

இன்று தமிழர்கள் வைக்கும் பெயர்களின் அர்த்தமும் காரணமும் தமிழர்களுக்கே தெரிவதில்லை. ஏதோ நாலு எழுத்தை சேர்த்து ஒரு பெயராக வைத்து தமிழுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள். இப்படி வைக்கும் பெயர்களில் வடஎழுத்துக்கள் வருவதையே பெருமை என்று கருதுகிறது பல தமிழ் அறிவு ஊற்றுகள். நானும் ஒரு தமிழன் அதிலும் ஒரு படித்த தமிழன் ஆகையால் நானும் இந்த "தமிழ் பெயர் அறிவு ஊற்றுகள்" கூட்டத்தில் சேர்ந்து தமிழை மேலும் சிறப்பிக்க முடிவெடுத்துள்ளேன்.

தமிழர்கள் தங்கள் பெயர்களை ஆர்யா, விஜய் என்று வட மொழியில்வைக்கிறார்கள் இவர்களால் வரும் காலத்தில் பல ஆண்மகன்கள் சுர்ஜித் சிங் பர்னாலா(தமிழக ஆளுனரை சிறப்பிக்க), நெல்சன் மண்டேலா என்றபெயர்களிலும் பெண்கள் பலர் ஹில்லாரி கிளிண்டன், மனுசா கொய்ராலா என்ற பெயருடனும் தமிழகத்தில் உலா வருவார்கள் போல் தெரிகிறது. இப்படி தங்கள் பிள்ளைகளுக்கு பெயர்வைக்கும் தமிழர்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கூட வேறு மொழி பெயர்கள் தான் வைப்பார்கள் ஜிம்மி, ஜாக்கி, ராக்கி, சீசர், அல் க்ஸ் போன்ற பெயர்கள். இதில் ஒரு சிறப்பு எங்கள் கல்லூரி விடுதி நாயின் பெயர் மார்லி. இது போன்ற பெயர்களை யார் எங்கு கண்டுபிடிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. இது போன்ற புது கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு தமிழ் செம்மொழி விருது தந்து சிறப்பிக்க வேண்டும்.

இதில் இருந்து மாறுபடும் பலர் தங்கள் பெயர்களை bus boarad இல் இருந்துதான் தெரிவு செய்வார்கள் அதாவது ஒரு ஊரின் பெயரை தங்கள் பெயராகவைத்துக்கொள்வார்கள். இப்படி வந்தவை தான் கோபி, பழனி ,திருப்பதிபோன்ற பல பெயர்கள் என்று எனது ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். வரும்காலங்களில் படித்த பல தமிழர்கள் தங்கள் பெயர்களை மாக்கினாம்பட்டி , ஊஞ்சவேலம்பட்டி, பாளையங்கோட்டை என்று மாற்றிக்கொண்டால் அதில்ஆச்சர்யப்படுவதர்க்கு ஒன்றும் இல்லை. நானும் ஒரு தமிழன் அதிலும்படித்த தமிழன் ஆகையால் பிள்ளைகளுக்கு நானும் ஊர் பெயரை வைக்கசொல்வேன் அதிலும் மற்ற நாட்டு ஊரின் பெயர்கள் தான் வைப்பேன் ஆண்பிள்ளைகளுக்கு ஹிரோஷிமா என்றும் பெண் பிள்ளைகளுக்குநாகசாகி(நாகலச்சுமியன் modern name) என்று வைப்பேன். இதை பார்க்கும்பல தமிழ் ஆர்வரளர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு பெய்ஜிங், ஆம்ஸ்டர்டம், காத்மாண்டு என்று பல பெயர்களை வைத்து தமிழைவளர்ப்பார்கள்.

தமிழை வளர்ப்பதில் தமிழ் திரைப்படங்களின் பங்கு பற்றி நான்சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? இப்படி பெயர் வைப்பதைபார்த்த தமிழ் பட தயாரிப்பாளர்கள் முதல் முறையாக விருமாண்டி படத்தில்வந்தத காளைக்கு சொரிமுத்து என்று பெயரிட்டு "தமிழ் பெயர் அறிவுஊற்றுகள்" கூட்டத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தினார்கள்.இதுபோன்ற பல தொண்டுகளை தமிழுக்காக செய்யும் தமிழ் சினிமாவை பற்றிஅடுத்த பகுதியில் தெளிவாக பார்ப்போம்.......

Thursday, October 14, 2010

காமன்வெல்த் கல்மாடி

காமன்வெல்த் என்றாலேயே இந்தியர்களுக்கு விளையாட்டை பற்றி தெரிகிறதோ இல்லையோ ஆனால் விளையாடிய கல்மடியை பற்றி நன்றாக தெரியும். இவர் பெயரில் உள்ள மாடிக்கு மட்டும் கல் இருக்கும்( கல் + மாடி) ஆனால் இவர் கட்டும் பாலத்திலோ மண் கூட இருக்காது. அப்படிப்பட்ட தலை சிறந்த கட்டிடகலை வல்லுநர் என்றே இவரை சொல்லலாம்.
அப்படியென்றால் அந்த கட்டிடம் எப்படி இருக்கும் என்று பாருங்கள். இவர் தலைமையில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று விளையாட்டு துவங்குவதற்கு முன்பே இடிந்து விழுந்த்தது ( அது தான் கீழே உள்ள படம்). தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர்கள் இந்த அளவுக்கு சிறந்த கட்டிடக்கலை வல்லுனர்களாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆகையால் இந்தியா வந்த இங்கிலாந்து மகாராணியிடம் இவருக்கு இங்கிலாந்தின் உயரிய விருதான "sir" பட்டம் வழங்க பரிந்துரை செய்கிறேன்.

மதிப்பிற்குரிய கல்மாடி விளையாட்டு துவங்குவதற்கு முன்பு விளையாட்டு வீரர்கள் தங்க கட்டப்பட்ட அறைகள் சும்மா இருக்கக்குடாது என்பதற்காக நாய்களுக்கும், பாம்புகளுக்கும் வாடகைக்கு விட்ட கருணை உள்ளம் படைத்தவர். மேலும் இவர் வீரர்கள் மீது கொண்டுள்ள அக்கரை காரணமாக " பணிகள் நடந்து வருகிறது ஆகையால் மெதுவாக ஓடவும்" என்ற விளம்பர பலகையை 100 மீ ஓடு பாதையில் வைக்க உத்தரவிட்ட மாமனிதர். இவரால் நீச்சல் போட்டிக்கு கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியை பார்த்த ஆசுறேலிய வீரர்கள் "துபாயில் இதை குப்பை தொட்டி என்பார்கள்" என்று புகழ்ந்து கூறினர். இவரால் நம் நாட்டுக்கு ஏற்பட்ட நட்பெயர்க்கு இந்த பாரதியார் பாடலை நாளைய விடியலின் சார்பாக dedicate செய்து கொள்கிறேன்.

"அசிங்கமில்லை, அசிங்கமில்லை, அசிங்கமென்பதில்லையே
இச்சகத்தில் உள்ள நாடுகளெல்லாம் சிரித்து நின்ற போதிலும்
அசிங்கமில்லை, அசிங்கமில்லை, அசிங்கமென்பதில்லையே"

இந்த தீவிர வாதிகளுக்கு அறிவே இல்லை தானாக இடிந்து விழும் கட்டிடத்துக்கு குண்டு வைப்போம், தீ வைப்போம் என்று மிரட்டி குண்டுகளுக்கு உள்ள மான மரியாதையை கெடுக்கின்றனர். ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வாங்க முடியாமல் திணறும் இந்தியா இதில் மட்டும் எப்படி இத்தனை பதக்கம் வாங்குகிறது என்றால் அனைத்தும் கல்மாடியின் தீரிய சிந்தனையே, மற்ற நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதக்கும் சரியாக தராவிட்டால் அவர்களால் சரியாக விளையாட முடியாது அனைத்து பதக்கத்தையும் நாமே சுருட்டிவிடலாம் என கணக்கு போட்டார். இப்படி கணக்கு போட்டு எதிரிகளை புறமுதுகு காட்டி ஓடவைத்ததால் இன்று முதல் நீ எங்களால் "காமன்வெல்த் கல்மாடி" என்று பாசத்தோடு அழைக்கப்படுவாய்.

பாப்பம்பட்டிக்கும், எப்ப்பம்பட்டிக்கும் இடையே நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா வென்ற பதக்கங்களை இந்தியா பாகிஸ்த்தான் எல்லையான வாகாவில் வைத்து சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மொத்த காமன் வெல்த் போட்டிகளின் சிறப்பே இலங்கை அதிபர் வருவதுதான் இவர் வருகையை தடுக்க எந்த தமிழனாலும் முடிவதே இல்லை. எது எப்படியோ வீரர்கள் குவித்த பதக்கத்தை நினைத்து பெருமை படுவீர்களோ அல்லது கல்மாடியை பற்றி வருந்துவீர்களோ அது உங்களுக்குத்தான் தெரியும்.


Sunday, October 10, 2010

மலையேற்றம்....



எங்கள் கல்லூரி தேசிய மாணவர் படையில் மூன்று ஆண்டு கல்லூரி மாணவர்கள் இடம் பெறுவார்கள். தேசிய மாணவர் படையில் மலையேற்றம் போன்ற பயிற்ச்சிகள் இன்றியமையாதது.நான் மூன்றாம் ஆண்டு பிரிவை சேர்ந்தவன். இந்த மலை எற்றத்திக்கான அணைத்து பொறுப்புகளையும் NCC ஆசிரியர் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் ஒப்படைத்தார்.இதற்க்குக் காரணம் நாங்கள் முதல் வருட மாணவர்களாக இருந்த போது மலையேற்றத்திற்கு அங்கு சென்றுள்ளோம்

நாங்கள் முதல் ஆண்டில் மேற்கொண்ட பயணம் வெயில் காலம்.ஆனால் இப்போது போனது ஜூன் -செப்டம்பர் மழை முடிந்த தருணம். நாங்கள் முதலில் சென்றதற்கும் இரண்டாவது முறை சென்றதற்கும் பலவேருபாடுகளை உணர முடிந்தது. முதல் முறை நாங்கள் சென்ற போது அப்போது எங்களை வழி நடத்தியவர்களின் கொள்கை "யார் முதலில் 8 km தூரமும்,கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 மீ உயரமுள்ள மலை உச்சியை அடைகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்" என்பதாக இருந்தது. இதனால் முதலில் வேகமாய் மலையேற துவங்கினவர்கள் ஒரு கட்டத்தில் கால் ஓய்ந்து நிற்க கூட முடியாமல் பாதியில் திரும்பினர். மலை உச்சியை அடையாமல் பாதியில் நின்றவர்கள் அநேகம் பேர். இம்முறை நாங்களோ அனைவரும் மலை உச்சியை அடையவேண்டும் என்பதையே இலக்காக கொண்டோம், அனைவரும் இலக்கையும் அடைந்தனர்.


எங்கள் பயணம் கல்லூரியில் இருந்து காலை 6 மணிக்கு ஆரம்பமானது. நாங்கள் காலை உணவை முடித்த பின் சரியாக 8.30க்கு மலையில் ஏற துவங்கினோம் எங்கள் பாதை காடுகளுக்குள்ளும், கட்களுக்குள்ளும் வளைந்து, வளைந்து சென்றது. 9.15 மணியளவில் ஒரு கோயிலை அடைந்தோம். அங்கு ஒருவரை வழிகாட்டியாக அழைத்துச்செல்ல பணிக்க அவரும் ஒப்புக்கொண்டு எங்களுடன் வந்தார்.அவர் முன்னால் செல்ல நாங்கள் அவரை தொடர்ந்தோம். அந்த இடத்தில் எங்களுக்கு விதிக்க பட்ட கட்டளைகள் இரண்டு ஒன்று அனைவரும் அணி அணியாக செல்லவேண்டும் என்பது மற்றொன்று போகும் பாதையை மறவாமல் இருக்க வழி முழுக்க அடையாளங்கள் இட வேண்டும் என்பது தான். நாங்கள் வழியில் நெல்லிக்காய் மரத்தில் இருந்த நெல்லிக்காயை சாப்பிடும் வாய்ப்பு கூட கிட்டியது.


எங்கள் வழிகாட்டி தொடர்ந்து "யானைகள் ஜாக்கிரதை" என்று எச்சரித்து வந்தார். "வாய்ப்பு கெடச்சா நானு ஆனைய காட்றன்" என்று சொன்ன வழிகாட்டியால் கடைசிவரையில் யானை சானியயை மட்டுமே காட்ட முடிந்தது. இப்படி போக ஒரு இடத்தில் அனைவரும் ஓய்வுக்காக அமர்ந்தோம் அப்போது அங்கிருந்த ஒரு சிறிய ஓடையில் மூன்றாம் ஆண்டு மாணவன் ஏதோ gemni circus கம்பனியில் இருந்து வந்தவர் போல சிறிய ஓடையில் பெரிய வித்தை காட்டினார் பிறகு வழுக்கி அந்த ஓடைக்குள்லேயே விழுந்தார் இது அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. ஒரு கிலோ மீட்டர் உயரம் போனால் 6.4 டிகிரி (165m - 1 டிகிரிஅளவு) வெப்பம் குறையுமாம் அப்படி குறைவதை உணர்ந்தோம்.

அப்படியே மலை ஏர அனைவருக்கும் கொடுக்கப் பட்டிருந்த மதிய உணவை 12.30 மணியளவில் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து முன்னேற துவங்கினோம் ஒரு வழியாக கடைசியில் மலை உச்சியை 1.10க்கு அடைந்தோம்.அந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் ஒரு பக்கம் திருமூர்த்தி அணையும் மறுபக்கம் ஆழியார் அணையும் தெரியும் இந்தமுறை மேக மூட்டம் அதிகம் இருந்ததால் திருமூர்த்தி அணையை பார்க்க முடியவில்லை.அனைவரும் அங்கு பல புகைப்படம் எடுக்க திடீர் மழை மற்றும் காற்று அடித்ததால் 2 மணி வரை அங்கு இருப்பதாக இருந்த திட்டம் மாற்றி 1.40 க்கே திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அந்த தருணத்தில் வந்த பாதையின் அடையாளம் தெரியவில்லை இதனால் செய்வதறியாது நின்றோம். எனினும் எந்த வித பயத்தையும் வெளிக்காட்டாமல் இருந்த மூன்றாம் அண்டு மாணவர்களில் ஒருவர் பாதையை கண்டுபிடித்தார்.

ஒருவகையான நிம்மதியுடன் இரங்க துவங்கினோம். வரும் வழியில் மழைக்கு நினைந்த பாறைகள் வழுக்கி விடும் பாறைகளாகவே இருந்தது. அப்படி வரும் வழியில் ஒவ்வொரு மூன்றாம் ஆண்டு படையினரும் கிட்டத்திட்ட 100 முறையாவது பார்த்துப்போ பார்த்துப்போ என்று சொன்னதை அனைவரும் கவனித்திருப்பார்கள்.ஒரு வழியாக 4.00 மணிக்கு கோயிலை அடைந்திருப்போம். எங்கள் ராஜ யோகம் அந்த கோயிலில் அன்னதானம் போட்டார்கள் நாங்களும் இருந்து விழாவை சிறப்பித்து வந்தோம். வரும் வழியில் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு சிறிய கோயிலை கடக்க நேர்ந்தது. அங்கு தமிழில் அர்ச்சனை செய்வதை பலரும் கவனிக்கவில்லை (நானும் கூட) இரண்டாம் ஆண்டு மாணவன் அதை கவனித்து சொன்னதோடு அதை பாடமாக்கியே தீரவேண்டும் என்றதால் அது உடனே படமாக்கப்பட்டது.
இப்படி இனிதே முடிந்தது இந்த மலையேற்றம்.

இதில் இருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்பதை நான் கண்டிப்பாக தெளிவு படுத்தியே தீர வேண்டும். "ஆயிரம் இடங்கள் சென்றவர்களும், ஆயிரம் புத்தகம் படித்தவர்களும் புத்திசாலி ஆவார்கள்" என்பது சீன பழமொழி. இந்த பயணத்தில் நாம் தெரிந்து கொண்டது ஏராளம்.
1.ஒளி கூட ஊடுருவாத காடுகளுக்குள் நம் படை ஊடுருவியது, பல நீர் நிலைகளை கடந்தோம், பல பாறைகளில் வழுக்கி விழுந்தோம். எனினும் நாம் நிற்கவில்லை எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்தோம் அடைந்தோம். இதனால் தன்னம்பிக்கை அதிகமாகும்.
2.இது (அணி அணியாக சென்றது) ஒரு கூட்டு முயற்சி இதனால் அணியோடு ஒத்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
3.ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்கள் சரியாக வருகிறார்களா என்று மற்றவர்களை பற்றி சிந்தித்துக்கொண்டே வந்தோம் இதனால் மற்றவர்கள் மீதுள்ள அக்கறை அதிகமாகும் இதுவே பிற்காலத்தில் நல்ல குடிமகனை உருவாக்கும்.
4.அழகிய காடுகளையும், மிருகங்களையும் கண்ட நமக்கு இயற்கை மீது கொண்ட ஆர்வம் அதிகமாகும் இதனால் இயற்கையை பாதுகாப்போம்.

இந்த நாளை பற்றி முழுமையாக கூற வேண்டுமானால் பத்திகள் இன்னும் பல நீளும் என்பதால் இதோடு நிறைவு செய்கிறேன். இந்த கருத்துகள் அனைத்தும் நம் கல்லூரி மாணவர்க்கு எழுதப்பட்டது. இதில் உங்களுக்கு மாற்று கருத்தோ அல்லது இன்னும் சேர்க்க வேண்டிய கருத்துக்கள் என்று உங்களிடம் இருந்தால் அதை பின்னூட்டத்தில்(comment) தெரிவியுங்கள்.உங்களிடம் இருந்து பின்னூட்டங்களை எதிர்பார்கிறேன்.

Thursday, October 7, 2010

முத்து மணி மாலை...

நம்ம இந்தியா வரலாற்றை பற்றி சொல்லனுமா என்ன?.. இது வரைக்கும் ஒரு நாட்டு மேல படைஎடுத்துருப்போமா?(தமிழர்களை தவிர) நாம யாருக்கு என்ன பாவம் பண்ணுனோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது என்று என்னை சிந்திக்க வைத்தது இந்த முத்து மணி மாலைதான். முத்து மணி மாலை..... என்று பாட்டை மட்டும் கேட்டு பழகிய நமக்கு இது புதுசு தான். அது தான் சீனா வின் string of pearls strategy. இது இந்தியாவை சுத்தி வளைத்து இந்திய பெருங்கடலிலும்,அரபு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்துவது தான் இதன் முக்கிய நோக்கமே.

இப்படி நம் நாட்டை சுற்றி வளைக்க தங்களால் முடிந்ததை செய்வது நமது அருகில் உள்ள நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், நேபாளம் தான். இப்படி நாலு பக்கமும் சுத்தி வளைச்ச நாம எங்கதான் போறது.

போரா ஒரே அக்கபோர் என்று நினைப்பது நம் பண்பாடு அதனால் தான் மீனவர்கள் செத்தாலும் சரி, நம் இனத்தவர்கள் செத்தாலும் சரி நாம் எதுவும் கேட்க மாட்டோம். "செவியில் சங்கு வைத்து முழங்கினும் நீண்ட துயில் கொள் தமிழா.." என்று சொன்னது தமிழருக்கு சரியாக பொருந்தும். கும்பகர்ணன் கூட 6 மாதத்திற்கு பிறகு விழிப்பான் ஆனால் 600 ஆண்டுகுக்கு மேல்(பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின்) தூங்கும் தமிழர் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய தமிழர்களிடம் எந்திர்ரா(விழித்தெழு) எந்திர்ரா(விழித்தெழு) என்றால் எந்திரா எந்திரா என்று திரைப்படத்தின் பெயரையே சொல்லுவார்கள் என்பது திண்ணம்.

Wednesday, September 22, 2010

காதலர் தினம்.......

இன்றைய கல்லூரிகளில் காணப்படும் காதலை பற்றி சொல்லவாவேணும் படிப்பதற்கு கல்லூரிவரும் மாணவர்கள் காதலிக்க ஆரம்பிற்பது வினோதமானது. இப்படி காதலிக்க வைப்பதில் நண்பர்களின் பங்கு மகத்தானது.ஒரு மாணவன் எதார்த்தமாக ஒரு மாணவியிடம் பேனா, பென்சில் வாங்கிவிட்டால் போதும் அவர் நண்பர்களுக்குத் தான் கொண்டாட்டம் காரணம் அவர்கள் அந்த மாணவியை பற்றி அவனிடம் திரும்ப திரும்ப பேசி எப்படியாவது காதலை வரவைத்து விடுவார்கள்.

செல் கம்பனி ஓடுவதற்கு காரணமே இவர்கள் தான் என்று நான் நினைக்கிறேன்.இப்படி காதலிப்பவர்கள் செல்போனில் பேசுவதை தான் பொறுத்துக்கொள்ள முடியாது இவர்கள் இரவு முழுவதும் செல் போனில் பேசுவார்கள் பகலில் நேரில் பேசுவார்கள் இப்படி 24 மணி நேரம் பேசும் இவர்கள் பாட வேளைகளில் தூங்குவார்கள். இப்படி இவர்கள் என்னதான் பேசுவார்கள் என்ற சந்தேகம் என்னை என் நண்பனிடம் இந்த கேள்வியை கேற்க செய்தது.


நான்:மாப்ளே இவ்வளவு நேரமா பேசுனையே உங்க ஊர்காரங்க அத்தன பேர் கிட்டயும் பேசுனைய?

நண்பன்: இல்லடா என்னோட காதலிகிட்ட பேசுனன்

நான்: ஓ.. அப்படி என்னடா இவ்வளவு நேரமா பேசுன?

நண்பன்:அவங்க அம்மா இன்னைக்கு தேங்காய் போடாம தேன்காசட்டினி செஞ்சாங்களாம் அதான் எப்படி செஞ்சாங்கன்னு கேட்டேன்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள் ஆனால் தூணுக்கு தூண் இவர்கள் இருப்பார்கள்.கலூரிகளில் எந்த விழ வந்தாலும் முதலில் இவர்களுக்குத்தான் கொண்டாட்டம்(ஆசிரியர் தினமாக இருந்தாலும் கூட) காரணம் பல பாட வேலைகள் விழாவிற்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தை சிறிதும் வீணாக்காமல் இவர்கள் பேசுவார்கள்.

காதல் என்ற தலைப்பிலேயே ஒரு படம் வெளிவந்தது.இந்த படத்தில் காதலர்கள் சேர்ந்தால் என்ன கஷ்டம் வரும் பிரிந்தால் என்ன கஷ்டம் வரும் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கும் இந்த படத்தை பார்த்துவிட்டு காதலர் பேசும் வீர வசனம் குறிப்பிடத்தக்கது. எத்தன காதல் தண்டபாணி வந்தாலும் நம்ம காதல பிரிக்க முடியாது என்பார்கள். இந்தப் படத்தை இவர்கள் தவறாக புரிந்து கொண்டதே இதற்க்கு காரணம். இதற்க்கு இந்தகதையை சான்றாக சொல்லலாம்.

"ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் விடிய விடிய அரிச்சந்திர புராணத்தை நடத்தினாராம் பிறகு அங்கு அமர்ந்திருந்த ஒரு மாணவனை பார்த்து இந்த கதையில் இருந்து நீ என்ன தெரிந்து கொண்டாய் என்று கேட்டார் அதற்க்கு அந்த மாணவன் ஐயா ஒரு பொய் சொன்னால் நமக்கு இத்தனை துன்பம் வராது அதனால் நாம் அனைவரும் பொய்சொல்ல வேண்டும் என்றான்" துன்பம் வந்தாலும் பொய்சொல்ல கூடாது என்ற கருத்தை அந்த மாணவன் எப்படி புரிந்து கொண்டான் என்று பாருங்கள்.

ஒரு சில காதல் வெற்றியில் முடிந்தாலும் பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. காதலித்து சேர்ந்தால் உறவினர்களோடு குழப்பம் அப்படியே காதலை மறந்து வாழ்ந்தாலும் குழப்பம். ஆகையால் காதலித்து நேரத்தையும்,பணத்தையும் வீணாக்குவதை விட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இன்னும் இவரது கருத்தையும் பாருங்கள்

click here வில்லவன்

Sunday, September 5, 2010

இந்தியா ஒரு கோழிப்பண்ணை

இந்தியா 120 கோடி கோழிகள் வாழும் ஒரு கோழிப்பண்ணை. கோழிகளில் பலவகை உண்டு அது பிராயிளர் கோழி, போண்டா கோழி, நாட்டு கோழி, வாண்கோழி, நெருப்புக்கோழி, முட்டை கோழிபோன்றவை இதே போல இந்தியகோழிகளிலும் தமிழ் கோழி, மலையாளகோழி, கன்னட கோழி,மராட்டிய கோழிஎன்று பல பிரிவுகள் உள்ளன. அதில் மிகவும்முக்கியமான பிரிவு இரண் டு அவை ஆரியகோழி மற்றும் திராவிட கோழி.

இந்த அணைத்து கோழிகளையும் வெள்ளை கோழி
பறக்க வி
டாமல் 1947வரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.1947க்கு பிறகு அணைத்து கோழிகளும் சுதந்திரமாய் வாழ்ந்தது. ஒருநாள் அணைத்து கோழிகளுக்கும் ஒரு சந்தேகம் வந்தது "கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? "என்ற சந்தேகம்தான் அது. இதில் இறுதியாக ஆரிய கோழிகள் கய்பர் கணவாய் தாண்டி பறந்து வந்த அயல் நாட்டு கோழிகள் திராவிட கோழி இந்த மண்ணிலேயே பரம்பரை பரம்பரையாய் முட்டை வைத்து குஞ்சு பொறித்து வாழ்ந்து வரும் பாரம்பரிய கோழிகள் என்ற முடிவு வந்தது.இதனால் ஆரிய கோழிகள் ஏமாந்து போனது.

நிலைமை இப்படி இருக்க இந்த கோழிகளுக்கு இடையே எந்த மொழியில் கூவ வேண்டும் என்று ஒரு பிரச்சனை வந்தது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆரிய கோழிகள் அணைத்து கோழிகளும் இந்தியில் தான் கூவ வேண்டும் என்று வற்புறுத்தியது இதை அறிந்த திராவிடக் கோழிகள் முக்கியமாக தமிழ் கோழிகள் நாங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழில் தான் கூவி வருகின்றோம் இப்பொழுது மட்டும் நாங்கள் இந்தியில் கூவ வேண்டுமா? என்று போராட்டம் செய்தது. இதன் விளைவாக "கோழிகள் கூவுவது இதில் யாரும் குரிக்கிடக்குடாது இந்தியக் கோழிப்பண்ணையில் வாழும் அனைத்துக் கோழிகளும் தங்கள் விருப்பம் போல எந்த மொழியில் வேண்டுமானாலும் கூவலாம்" என்று முடிவு வந்தது. இந்த போராட்டத்தை சிறப்பாக நடத்தியது திராவிட கோழிகள் முன்னேற்ற கழகமும், தராவிட கோழிப்பண்ணை உரிமையாளரும் தான்.பிறகு தமிழ் நாட்டு கோழிகள் அனைத்துமே திராவிட கோழிப்பண்ணையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

பிறகு சில காலம் அணைத்து கோழிகளும் நாம் தமிழ் கோழிகள் நமக்குள் எந்தப் பாகுபாடும் இல்லை என்று ஒரே இனமாக வாழ்ந்தது.காலப்போக்கில் சில கோழிகள் நாங்கள் பிரயிளர் கோழிகள் நாங்கள் தான் உயர்ந்த கோழிகள் என்றது, இல்லை நாங்கள் வாண் கோழிகள் நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்றது சில கோழிகள் இப்படியே கோழிகள் ஜாதி வாரியாக கோழிப்பண்ணைகளை ஆரம்பித்தது. இந்த கோழிப்பண்ணைகளில் முக்கியமானது பாட்டாளிகளின் கோழிப்பண்ணை தான்.இந்தப் பண்ணைகளின் சிறப்பே பண்ணையாய் பறந்து மற்ற பண்ணையில் காலத்திற்கு ஏற்றவாறு மாரி மாரி 5 ஆண்டுகளுக்கு சேர்ந்துகொள்ளும்.

பாரதியார் அன்றே கோழிகளை பார்த்து கோழிகளில் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினார் இன்னும் பலர் அணைத்து கோழிகளும் முட்டையில் இருந்து தான் வருகிறது அணைத்து கோழி முட்டையும் வெள்ளை நிறம்தான் இறுதியில் அணைத்து கோழிகளும் பிரியாணி ஆகத்தான் போகிறது இதில் நமக்குள் என்ன வேறுபாடு என்று வேற்றுமைகளை ஒழிக்க பாடுபட்டது.இதற்க்கு எதிராக நடக்கும் வகையில் இன்றைய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழிகளை ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட தமிழர்களின் ஒற்றுமையைபார்த்த சிங்களக்கோழிகள் இலங்கையில் வடக்கே இருக்கும் தமிழ் கோழிகள்சிக்கன் குன்யாவை பரப்புகிறது என்றுநிறைய கோழிகளை கொன்றுவிட்டது. பாதி தமிழ் கோழிகள் கனடா, ஸ்காண்டிநேவியா பண்ணைகளுக்குபறந்து சென்றுவிட்டது. இந்தசிங்களக்கோழிகள் தமிழ் மீனவர்களைகூட நிம்மதியாக மீன் பிடிக்க விடமாட்டேன் என்கிறது.

இன்னும் வரும் காலங்களில் பல கோழிப்பண்ணைகள் வருவது போல்தென்படுகிறது.இப்படி தொடர்ந்து கோழிப்பண்ணைகள் வருவதால் ஒற்றுமைஇன்னும் அதிகமாகுமோ? ஆயிரம் கோழிப்பண்ணை இருந்தாலும் கோழிகளைகாக்க ஒரு நல்ல கோழிப்பண்ணையும்,ஒரு உண்மையான கோழிப்பண்ணைஉரிமையாளர்களும் இல்லை என்பது தான் உண்மை.படிக்கின்ற நாமாவதுவேற்றுமைகளை அகற்றி ஒன்று படுவோம்.

Sunday, August 22, 2010

நிலா சுருங்குகிறது....

நிலா சுருங்குகிறது....

நிலவின் வயது கிட்டத்திட்ட 4.5 பில்லியன் ஆண்டுகள். கடந்த ஒரு பில்லியன் வருடங்களாக நிலவு சுருங்கிக்கொண்டுதான் இருக்கிறது இன்றளவும் சுருங்கி வருகிறது. ஆனால் இந்த சுருக்கம் வெறும் 100 மீட்டர் அளவுதான் என்றும் இதனால் பெரும் பாதிப்பு நிகழாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நிலவு உருவாகும் போது அதன் மத்தியில் வெப்பம் அதிகமாய் இருந்தது என்றும் அந்த வெப்பம் தொடர்ந்து குறைந்து வருவதே இந்த சுருக்கத்திற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா விண்வெளி ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் இந்த சுருக்கம் தென்படுவதாக கூறுகின்றனர்.நிலவில் ஏற்ப்பட்டுள்ள சில சுருக்கங்கள் பல மயில் அளவுக்கு நீண்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.மெர்குரி போன்ற கோள்களில் இந்த சுருக்கம் சமீப காலத்தில் மிகவும் அதிகமாக தென்படுகிறதாம்.
இப்படியே சுருங்கிக்கொண்டு போனால் வரும் காலங்களில் நிலவின் நிலைமையும் நம்(தமிழன்) நிலை போல ஆகிவிடும் முதலில் இந்தியா முழுவதும் தமிழ் இருந்தது (சிந்து சமவெளி), பிறகு தமிழகம் மற்றும் இலங்கை, இப்போது தமிழரின் பரப்பு மேலும் சுருங்கி தமிழகம் மட்டும் தான் என்று ஆகிவிட்டது.

மேலும் காண்க:
http://www.nasa.gov/mission_pages/LRO/news/shrinking-moon.html
http://hindu.com/2010/08/21/stories/2010082152261300.htm

Wednesday, August 18, 2010

பிளாஸ்டிக்


பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி அறியாமலேயே நம்மில் பலர் அதை பயன்படுத்துகிறோம். இன்று சிறு குழந்தைகள் குடிக்கும் பால் குவளையில் இருந்து வயதானவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் வரை அனைத்திலும் பிளாஸ்டிக் பொருள்களை காணலாம். பிளாஸ்டிக்கால் ஏற்படும் நன்மையை விட தீமையே அதிகம். குறிப்பாக பிளாஸ்டிக் பைகள்(plastic carry bags) ஏற்படுத்தும் மாசு மிகவும் அதிகம். பிளாஸ்டிக் பொருள்கள் மறு சுழற்ச்சிக்கு உட்படுத்தப்படுபவை இதனால் மீண்டும் மீண்டும் மாசு ஏற்படுமே அன்றி இதனால் மாற்றம் ஏதும் வராது. குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் காற்றுக்கு பலவாரு பறந்து செல்கிறது. இப்படி போகும் பிளாஸ்டிக்கை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எரித்தல் காற்றை மாசு படுத்தும், புதைத்தாலும் ஒன்றும் ஆகாது. இப்படி யாருக்கும் அடங்காத பிளாஸ்டிக்கை பற்றி யாரும் பேசுவதில்லை. இதை கலைஞர் தொலைக்காட்சி பாணியில் சொன்னால் இப்படித்தான் சொல்லவேண்டும் "தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கூட சாகமாட்டேன் பிளாஸ்டிக்காகத்தான் மிதப்பேன் நீங்கள் கட்டுமரத்தில் கூட ஏறி பயணம் செய்ய முடையது". இதை புரிந்து கொண்ட ராஜஸ்த்தான் அரசு பிளாஸ்டிக் பொருள்களை ஆகஸ்ட் 1 முதல் தடை செய்தது. நமது குடிமக்களை பற்றி நன்கு அறிந்த ராஜத்தான் முதல்வர் கடும் சட்டங்களை போட்டுள்ளார். இதில் தடை செய்யப்பட பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்தினால் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 15 இன் படி ஐந்து வருடம் சிறை அல்லது ஒரு இலட்சம் அபராதம் அல்லது இரண்டுமே என்று ஆடி மாத சிறப்பு செய்தியாக அறிவித்தார். சீனா பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் மாசை வெள்ளை புரட்சி என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துகிறார்கள் நம் நாட்டிலோ அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை இந்த விழிப்புணர்வை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை பயன் படுத்துவதை நாம் குறைத்துக்கொண்டால் பிளாஸ்டிக்கின் உற்பத்தி குறையும் பிறகு பிளாஸ்டிக் இல்லாத நிலைமை வரும் மேலும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய அரசு முன்வரவேண்டும்.இப்படி செய்தல் பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் மலரும்.

Tuesday, August 3, 2010

ஐநா சபையின் உறுப்பினர்களாக தற்போது 195 நாடுகள் உள்ளன. இப்போது பொது செயலாளர் பதவியிலுள்ள பான்- கி-மூன் இலங்கையில் நடந்த யுத்தத்தை உண்மையாக ஆராய்ச்சி செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை ஜூன் 23-ஆம் தேதி அமைத்தார்.அந்தக்குழுவின் தலைவராக இந்தோநேசியாவைச்சேர்ந்த மர்சுக்கி-ட்ருஸ்-மேன், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த யாஸ்மீன்-சூ-கா என்ற சட்ட நிபுணரும், ஸ்டீபன் ராண்டன் என்ற அமெரிக்க வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதற்க்கு முன்பு இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை போரில் போர் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் வெளிப்படையாக தெரியும் படி நிகழ்ந்ததாக ஒரு விமர்சனம். இம்மாதிரியான நிகழ்வுகளைப்பற்றி விசாரணை செய்யும் ஒரு அமைப்பு 1979-இல் தொடங்கப்பட்டது .31 நாடுகளை சேர்ந்த சட்ட வல்லுநர், எழுத்தாளர், சமூகத் தொண்டர், நோபல் பரிசு பெற்றவர்கள் என ஐந்து பேர் இந்த அமைப்பை தொடங்கினர்.
இந்த அமைப்பின் சிறப்பே இது விருப்பு வெறுப்பு இல்லாமல் விதி மீறல்களை மட்டுமே கண்டு பிடிக்கும் அமைப்பாக செயல்பட்டு வருவதுதான்.இந்த அமைப்பு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா? என்பதைக் கண்டறிய சர்வதேச புகழ்பெற்ற 10 சட்ட நிபுணர்களை நீதிபதிகளாக நியமித்து விசாரணை நடத்தியது.

இந்தப் 10 நீதிபதிகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் இருவர் நீதிபதி சச்சார் ஒருவர் மற்றொருவர் வீ .ஆர். கிருஷ்ணய்யர். இந்தக் குழு அதிபர் ராஜபக்சே போர்க் குற்றவாளி என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பின்னர்தான் மனித உரிமை மீறல்களையும், போர் விதி மீறல்களையும் ராஜபக்சே இழைத்துள்ளாரா என ஆய்வு செய்ய ஐநா மூவர் குழுவை நியமித்தது. இந்த மூவர் குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்திய பிறகுதான் தீர்ப்பு வெளியாகும்.இந்த ஆய்வை மேற்க்கொள்ள யுத்தம் நிகழ்ந்த வவுனியா, யாழ்ப்பாணம், வன்னிக்காடு, முள்ளிவாய்க்கால் வரை அணைத்து இடங்களையும் பார்வையிட வேண்டும். அங்குள்ள மக்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.முக்கம்களில் உள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள், உணவு, மருந்துகள் முறையாக கிடைக்கின்றன
வா
என்று பார்க்கவேண்டும்.

ஐநாவால் உண்மை என்று கூறப்படும் வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது ஆனால் இதை உண்மை இல்லை என்று மறுக்கிறது சிங்கள அரசு.

சொந்த நாட்டிலேயே அகதிக்கலாக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 3 இலட்சமா, 2 இலட்சமா, ஐம்பது ஆயிரமா என்பதை சரியாக கணக்கிட வேண்டும்.இந்தியா வழங்கிய 500 கோடி மக்களுக்கு சென்று சேர்ந்ததா என்று கண்டறிய வேண்டும்.2009 மே 18 தேதியன்று யுத்தம் முய்வுக்கு வந்தது இன்றோடு ஒரு வருடம் மூன்று மாதம் ஆகிறது இதுவரை எந்த பத்திரிக்கை நிருபர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அதுமட்டும் அல்ல ஐநா அமைத்த மூவர் குழுவைக்கூட அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் அறிவித்துள்ளார். இலங்கை வீட்டு வசதித்துறை அமைச்சர் விமல் வீரவன்சா இந்த மூவர் குழுவை எதிர்த்து உன்ன விரதம் மேட்க்கொண்டர் மேலும் புத்த துறவிகள் இந்தர்க்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அந்தத் துறவிகள் முதலில் சிங்களர்கள் பிறகு தான் அவர்கள் துறவிகள். துறவியான பிறகும் கூட அவர்களால் சிங்கள இன வெறியை துறக்க முடியவில்லை.

பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது இந்தியா, கிர்கிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கிறது இந்தியா, அப்பாவித் தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது, அப்பாவித் தமிழர்களை மீண்டும் குடியமர்த்த கோரிக்கை வைக்கிறது. ஆனால் ஐநா குழு பற்றி கருத்து சொல்லாமல் தவிர்த்து வருகிறது.

நம் இந்தியா தான் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக ஆய்வு நடத்த ஐநா குழுவிற்கு அனுமதி தரவேண்டும் என்று இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.

Thursday, July 15, 2010

எட்டாக் கல்வி .........

இன்று கல்வித்துறையை ஒரு நல்ல வியாபாரமாக்கிவிட்டர்கள். கல்லூரிகளும், பள்ளிகளும் தரமான கல்வியை தருகிறதோ இல்லையோ ஆனால் பணத்தை கொள்ளையடிக்கும் முதலைகளாகவே இருக்கிறது. அதாவது ஆத்தங்கரையிலும், குளத்தங்கரையிலும் உதயமாகும் பல கல்விநிறுவனங்கள் ஆக்ஸ்போர்ட் அளவுக்கு பணத்தை வாங்குகிறது. இதனால் பல மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போகிறது.
பல கல்வி நிறுவனங்கள் ஆரம்பமான பிறகு தான் கட்டிடமே கட்ட ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது கட்டிடப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் வரும் காலத்தில் செங்கல்லும், சிமென்டும் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே சீட் கொடுப்பார்கள். இந்த நிறுவனங்கள் குறைந்த செலவில் சிக்கனமாக செயல்பட நினைப்பதால் குறைந்த சம்பளம் யார் கேட்கிறார்களோ அவர்களையே பணியில் அமர்த்துகிறது. இப்படி நிர்வாகம் நிர்னைக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை மிரட்டுவதே " பேசினால் நான் பாடம் நடத்த ஆரம்பித்து விடுவேன்" என்றுதான். இந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் முறையே தனி a=b+c கரெக்ட் என்றும் a=c+b தவறு என்றும் தான் சொல்லித்தருவார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

தம்பி:அண்ணா மாடியில் உள்ள லைட்(light) எரியமாட்டிங்குது, ஆனால் கீழே இருக்கும் லைட் எரிகிறது, ஏன்?
படித்த அண்ணன்: தம்பி கரண்ட் கமியாக வருது அதனால் கரன்ட்டால் மேட்டுல மாடிக்கு எரமுடியல கீழே உள்ள லைட் பள்ளத்தில் உள்ளதால் கரண்ட் ஈசியாக போகிறது அதனால் கீழ் லைட் எரிகிறது.

படிக்கும் திறமை இருக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வியளிக்க கல்விநிறுவனங்கள் முன்வரவேண்டும். நல்ல கல்விநிறுவனங்கள் உயர்ந்த மரத்திலே பழுத்த உதவாத கனியாக இருக்க கூடாது.

Sunday, July 11, 2010

மக்கள் தொகை

எந்த ஒரு உயிரினத்தையும் பண்ணை வைத்து வளர்தலும் கூட நூறு ஆண்டுகளில் ஐநூறு சதவிதமாக உயராது அனால் அப்படி உயர்ந்த ஒரே உயிரினம் இந்திய மனிதர்கள் தான்.கடந்த நூறு ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக மக்கள் தொகையை பெருக்கியவர்கள் உத்திரப்ரதேச மக்கள் தான்.இன்று உத்திரப்ரதேச மக்கள் தொகை பிரேசில் நாட்டு மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.உத்திரப்ரதேச மக்கள் தொகையை விட வெறும் ஐந்து நாடுகளின் மக்கள் தொகைதான் அதிகம். உத்திரப்ரதேச மக்களுக்கு தமிழக மக்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்ட தமிழகத்திலும் மக்கள்தொகை தொடர்ந்து பெருகி வருகிறது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் நல்ல சான்று. "ஊருக்கு ஒரு தலைவர் இருக்கலாம் ஆனால் தலைவருக்கு ஒரு ஊரே இருக்க கூடாது" என்று படிப்பறிவு இல்லாத தமிழ் தலைவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

நம் நாட்டில் அரசு உதவி இல்லாமல் தானே வளர்வது மக்கள் தொகை மட்டும் தான்.விண்ணில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவதுகூட சுலபம் அனால் மக்கள் தொகையை கணக்கெடுப்பது ரொம்ப கஷ்டம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பவர்கள் கதறுகிறார்கள்.பல கோடி செலவழித்து மக்கள்தொகையை கணக்கெடுக்கும் ஒரே நாடு நம் நாடாகத்தான் இருக்க முடியும்.இந்திய புலிகளின் எணிக்கை 1500ரை விட குறைவாகவே உள்ளது அவை இந்திய புலிகளே இல்லை காரணம் அவை இந்திய புலிகளாக இருந்தால் குருகியகாலத்திற்க்குள் பல்லாயிரக்கணக்காக பெருகியிருக்கும்.

உட்பத்திதிரன் அதிகமாக வேண்டும்,மனிதவளம் வேண்டும் என்று தொழில் வளர பலர் சொன்னதை மக்கள் தவறாக புரிந்துகொண்டார்களோ என்னவோ மனித உற்பத்தியில் நம்மை முந்த உலகில் எவனும் இல்லை.குப்பை தொட்டியில் கூட குழந்தை கிடக்கும் பெருமைக்கு உரிய ஒரே நாடு நம் நாடுதான்.இதில் ஒரு நல்ல நேரம் சீன மக்கள் தொகை நம்மைவிட அதிகம் என்று பலருக்கு தெரியாது தெரிந்தால் நாட்டுப்பற்று மிக்க பலர் அவர்களை முந்த தங்களால் முடிந்த அளவு முயற்சிப்பார்கள்.

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை மேலும் இருமடங்காக பெருகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.இப்பொழுதே பேருந்துகள் குப்பை லாரி கேரளாவுக்கு அடிமாடுகளை ஏற்றிசெல்வதுபோல காட்சியளிக்கிறது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்குமோ.............இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் தமிழக அரசு விரைவில் ஒருவருக்கு ஒரு அரிசி கொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினாலும் வியப்பதற்கு இல்லை.

Thursday, July 8, 2010

அகதி ....


1959இல் திபதிய மக்கள் தலாய்லாமாவுடன் ஆயிரக்ககணக்கில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர்.
வந்தாரை வாழவைக்கும் இந்தியா அவர்களுக்கு ஆதரவு கொடுத்தது.கர்நாடகாவில் உள்ள பய்ளகுப்பே(Bylakuppe) என்ற இடத்தில் இந்திய அரசு 3000 ஏக்கர் நிலம் ஒதுக்கி அவர்களுக்கு அணைத்து உதவியும் செய்துவருகிறது.தரமான கல்வி,மருத்துவம் என்று தன் நாட்டு மக்களுக்கு ராமம் போட்டாலும் அவர்களுக்கு நிறையவே செய்கிறது இந்திய அரசு.இன்று பய்ளகுப்பே(Bylakuppe)இல் மட்டும் 14,000பேர் வசிக்கின்றனர்.இன்று பய்ளகுப்பே "குட்டி திபத்" என்று சொல்லும் அளவுக்கு திபத் ஆகவே மாறிவிட்டது.

நீங்களே குட்டி திபத்த பாருங்க "குட்டி திபத்"

இது இருக்கட்டும் இனி நம்ம கதைக்கு வருவோம் எல்லாம் நம்ம அப்பாவி ஈழ மக்கள் பற்றித்தான்.துயில் இல்லாத இரவுகள்,எங்கும் அழு
குரல்,பார்க்கும் திசை எல்லாம் இரத்தம்,தோண்டும் இடமெல்லாம் கன்னிவெடிகள்,
உயிர் இழந்து, உடமைகளை இழந்து நமது சொந்தங்கள் கைகொடுப்பார்கள் என்று எண்ணி கடல் கடந்து வந்தவர்கள்.அவர்களை தமிழர்கள் என்று பார்ப்பதை விட தீவிரவாதிகளோ என்ற சந்தேகத்துடன் மட்டுமே இந்திய அரசு பார்க்கிறது .இத்தாலியில் இருந்து இறக்குமதியான சோனியா காந்தி வளர்க்கும் நாய் தெற்கு பார்த்து குரைத்தால் கூட ஈழத்தமிழர்களால் ஆபத்து என்று சொல்லி அவர்களை வெளியே கூட வர அனுமதிப்பதில்லை.இந்த குற்றப்பார்வையை இந்திய அரசு கைவிடவேண்டும்.
திபத்தியர்களுக்கு கொடுக்க கூடாது என்பது என்னுடைய கருத்து இல்லை அனால் தமிழ் ஈழ மக்களையும் திபத்தியர்களை போல் நடத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.இப்பொழுது இலங்கையில் திவிரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனியாவது நமது அரசு தாராளமாய் உதவ முன்வரவேண்டும்.